×

சிறுமியிடம் சில்மிஷம் தாயின் 2வது கணவன் போக்சோவில் கைது

தண்டையார்பேட்டை: பூக்கடை காவல் நிலையம் அருகே உள்ள பிளாட்பாரத்தில் 13 வயது சிறுமி, அவரது தாய் மற்றும் தாயின் 2வது கணவர் சுகுமார்(41) என்பவருடன் தங்கி ஒன்றாக வாழ்ந்து வருகிறாள். மேலும், சிறுமியின் தாயாருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்தவளான 13 வயது சிறுமியிடம் சுகுமார் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக அங்கு வசிக்கும் பொதுமக்கள் 1098 என்ற எண்ணிற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், ராயபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளரிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை செய்ததில் சுகுமார் சிறுமியிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சுகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : Silmisham ,Pokcho , Silmisham's mother's 2nd husband arrested in Pokcho
× RELATED மாணவிகளிடம் தொடர்ந்து சில்மிஷம்: காமக்கொடூர ஆசிரியர் அதிரடி கைது