சென்னை: நகர்ப்புறம், அதனை சுற்றியுள்ள ரேஷன் கடைகளில் காய்கறி, தக்காளி விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். வெளிச்சந்தையில் கிலோ ரூ.150க்கு தக்காளி விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுவதாகவும் இதர காய்கறிகளின் விலையும் வெளிச்சந்தையில் கணிசமாக குறைந்துள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.