×

புதுச்சேரியில் கருப்பு பூஞ்சைக்கு பெண் முதல் பலி

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த ஒரு மாதத்தில் கணிசமாக  உயர்ந்தது. அதிகபட்சமாக ஒரே நாளில் 34 பேர் வரை பலியாகினர். மொத்த பலி  எண்ணிக்கை 1500ஐ கடந்துள்ளது. இதனிடையே கொரோனா தொற்றில் இருந்த குணமானவர்களுக்கு கருப்பு  பூஞ்சை நோய் தாக்குவது கண்டறியப்பட்டது. புதுச்சேரியில் 35க்கும்  மேற்பட்டோர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், புதுச்சேரி அடுத்த  வீராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த தேவன் மனைவி  எழிலரசி (48),  கொரோனாவுக்காக ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு  கருப்பு பூஞ்சை பாதிப்பு இருந்துள்ளது. அவர், சிகிச்சை  பலனின்றி நேற்று பரிதாபமாக உயிாிழந்தார். இதன்மூலம் புதுச்சேரியில்  கருப்பு பூஞ்சைக்கு முதல் உயிரிழப்பு பதிவாகி உள்ளது….

The post புதுச்சேரியில் கருப்பு பூஞ்சைக்கு பெண் முதல் பலி appeared first on Dinakaran.

Tags : Puducherry ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு