சென்னை: அமெரிக்கப் பயணம் முடிந்து சென்னை திரும்பிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. லேசான இருமல் இருந்த நிலையில் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது. மேலும் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என அவர் தனது
ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். .