×

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்த்திறப்பு 2,000 கனஅடியாக உயர்வு

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு வினாடிக்கு 2,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து இன்று காலை 1,000 கனஅடியாக திறக்கப்பட்டிருந்த நீரை 1,500 கனஅடியாக உயர்த்தினர். தற்போது மீண்டும் 2,000 கனஅடியாக உயர்த்தி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மழை எதிர்பார்க்கப்படும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகாரிகள் இந்த நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு மழை. பேரிடர் காலத்தில் செம்பரம்பாக்கம் ஏரியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பது வழக்கம்.

இந்த ஏரி நீர் திறப்பால் எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தற்போது 2,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு 400 கனஅடி நீர்வரத்து இருந்தாலும் மழை முன்னெச்சரிக்கையாக 2,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

Tags : Crescent Lake , Sembarambakkam Lake
× RELATED செம்பரம்பாக்கம் ஏரிக்கு ஒரே நாளில் 50 மில்லியன் கன அடி நீர்வரத்து