×

அதி கனமழை எச்சரிக்கை காரணமாக திருப்பதி திருமலையில் அடுத்த 2 நாட்களுக்கு பாதயாத்திரை மேற்கொள்ள தடை !

திருப்பதி : அதி கனமழை எச்சரிக்கை காரணமாக திருப்பதி திருமலையில் அடுத்த 2 நாட்களுக்கு பாதயாத்திரை மேற்கொள்ள தடை விதித்து தேவஸ்தான நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் மேற்கு திசையில் தெற்கு ஆந்திரா நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி திருப்பதிக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் திருப்பதி திருமலைக்கு செல்லும் 2  நடைபாதைகளான அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு பகுதிகளில் நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இன்றும் நாளையும் திருமலைக்கு பாத யாத்திரையாக செல்ல தடை விதித்து திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு கருதி சாலை வழியாக வாகனத்தில் மட்டுமே செல்ல பக்தர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Tags : Tirupati Tirumalai , அதி கனமழை
× RELATED தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி...