சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் 3000 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கனமழை தொடர்ந்து பெய்ததால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து கடந்த வாரம் முதல் அதிகரித்திருந்தது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 525 கனஅடியாக உள்ளது. வினாடிக்கு 250 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது.