×

டெல்லி விமான நிலையத்தில் ரூ90 கோடி ‘ஹெராயின்’ பறிமுதல்: 2 உகாண்டா பெண்கள் கைது

புதுடெல்லி: தலைநகர் டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வழக்கம்போல் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளை சோதனையிட்டனர். அப்போது உகாண்டா நாட்டை சேர்ந்த 2 பேரை பிடித்து விசாரித்ததில், அவர்களிடம் ரூ90 கோடி மதிப்புள்ள 12.9 கிலோ ஹெராயின் இருந்தது. அதையடுத்து அவர்களை கைது செய்த அதிகாரிகள், அவர்களிடம் இருந்த ெஹராயினை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கென்யா நாட்டின் நைரோபியில் இருந்து டெல்லி வந்த இரண்டு பெண்களிடம் 12.9 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது. அவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் உகாண்டா, கென்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் போதை பொருட்களை சப்ளை செய்து வந்துள்ளனர். விமான நிலையத்தில் பயணிகளை சோதனையிடும் போது, இவர்களை சுங்கத்துறையின் மோப்ப நாய்கள் காட்டிக் கொடுத்தது. கைதான இருவரும் தங்களது சூட்கேஸ்களின் இருபுறமும் உள்ள ஃபைபர்-பிளாஸ்டிக் பகுதியில் ஹெராயினை அடைத்து வைத்திருந்தனர். மருத்துவ சுற்றுலா விசா பெற்றுக் கொண்டு டெல்லி வந்துள்ளனர். அவர்களிடம் இருந்த ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, தொடர் விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.

Tags : Delhi , Rs 90 crore 'Heroin' at Delhi Airport: 2 Uganda women arrested
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...