கோவை: இலங்கை தாதா அங்கோட லெக்கா (37) என்பவர் கோவை சேரன் மாநகரில் பிரதீப் சிங் என்ற பெயரில் வசித்து வந்தார். இவருடன் இலங்கையை சேர்ந்த இவரது காதலி அமானி தான்சி (25) என்பவரும் ரகசியமாக வசித்து வந்தார். இலங்கை போலீசார் தேடுதலில் தப்பி இவர்கள் கோவை வந்துள்ளதாக தெரிகிறது. கடந்த 2020ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி மர்மமான முறையில் அங்கோட லெக்கா இறந்தார்.போலீஸ் விசாரணையில், அங்கோட லெக்கா இறந்த பின்னர் அவரை ேதடி அவரது கூட்டாளியான இலங்கை அதுரகிரியா பகுதியை சேர்ந்த லடியா என்கிற சனுக்கா தனநாயகா (38) என்பவர் கோவை வந்துள்ளார்.
இவர், அங்கோட லெக்காவின் காதலியை மிரட்டி வீட்டில் இருந்த துப்பாக்கியை பறித்து சென்றார். அங்கோட லெக்கா போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. போதை மருந்து விவகாரம் தொடர்பாக ரகசிய டைரி போன்றவற்றையும் அவர் எடுத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. போலீசார் சனுக்கா தனநாயகாவை தேடி வந்த நிலையில் இவர் பெங்களூரில் பதுங்கியிருப்பதாக தெரியந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெங்களூரில் சி.பி.சி.ஐ.டி டிஎஸ்பி சிவக்குமார் தலைமையிலான போலீசார் முகாமிட்டு தேடினர். பெங்களூரு, குள்ளப்பா சர்க்கிள் பகுதியில் பதுங்கியிருந்த சனுக்கா தனநாயகாவை மடக்கி பிடித்தனர்.
இவருடன் இருந்த பெங்களூரு சுப்பையா பாளையத்தை கோபாலகிருஷ்ணன் (46) என்பவரையும் பிடித்தனர். இவரும் போதை மருந்து சப்ளையில் கூட்டாளியாக இருந்துள்ளதாக ெதரிகிறது. போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். கோவை சி.ஜே.எம் கோர்ட்டில் ஆஜர்படுத்திபெருந்துறை கிளை சிறையில் அடைத்தனர். இவர்களை கஸ்டடி எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.