கோவை: கோவையில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். பள்ளி மாணவியின் வீட்டின் முன் சக மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் சின்மயா வித்யாலயா பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டதால் போராட்டத்தை கைவிட முடிவு செய்துள்ளனர்.