டெல்லி: மணிப்பூரில் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவு மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு அஞ்சலி செலுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வீரர்களின் தியாகம் என்றும் மறக்க முடியாதது, அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என்று பிரதமர் மோடி ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.