×

ஜெயங்கொண்டம் அருகே ஓட்டு வீடு இடிந்து விழுந்து 5 ஆடுகள் பலி

ஜெயங்கொண்டம் : ஜெயங்கொண்டம் அருகே ஓட்டு வீடு இடிந்து விழுந்ததில் 5 ஆடுகள் பலியானது. மேலும் அரியலூர் மாவட்டம் முழுவதும் 89 வீடுகள் சேதமடைந்துள்ளன.அரியலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதில் அரியலூர் மாவட்டத்தில் 89 வீடுகள் சேதமடைந்துள்ளன. அரியலூர் ஒரு கட்டத்தில் 13 குடிசை வீடுகளும், 19 ஓட்டு வீடுகளும் சேதமடைந்துள்ளது. ஜெயங்கொண்டம் வட்டத்தில் 3 வீடுகள் சேதமடைந்துள்ளன.

செந்துறை வட்டத்தில் 34 வீடுகளும், ஆண்டிமடம் வட்டத்தில் 20 வீடுகளும் சேதமடைந்துள்ளன. ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்த சின்னம்மாள் என்பவருடைய ஓட்டு வீடு ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் வீட்டின் உள்ளே கட்டப்பட்டிருந்த 5 ஆடுகள் சுவர் இடிந்து விழுந்ததில் பலியாயின. உடனடியாக சம்பவ இடத்தை ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆனந்தன் மற்றும் வருவாய் ஆய்வாளர், கிராம உதவியாளர்கள் ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.

Tags : Jayankondam , Jayangondam: Five goats were killed when a drive house collapsed near Jayangondam. In addition, 89 houses were damaged in Ariyalur district.
× RELATED பெரம்பலூர் /அரியலூர் வீராக்கன்...