சென்னை: தமிழில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, தெலுங்கில் ‘சாகுந்தலம்’ ஆகிய படங்களில் நடித்து வரும் சமந்தா, தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் ஒரு படத்தில் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் நடிக்கிறார். மற்றொரு படத்தில் ஹரி மற்றும் ஹரீஷ் இயக்கத்தில் நடிக்கிறார். இந்நிலையில், வரும் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சமந்தா சிறப்பு பேச்சாளராக பங்கேற்கிறார். இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் உரையாற்றுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் தென்னிந்திய நடிகை இவர் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.