சென்னை: புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைத்து பிறப்பித்த உத்தரவு நீட்டிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலை நிரந்தரமாக தள்ளி போட முடியாது எனவும் கருத்து தெரிவித்துள்ளது. பிற்படுத்தபட்டோர் கணக்கெடுப்பை நடத்தி தான் இட ஒதுக்கீடு வழங்க முடியும் என புதுச்சேரி தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.