மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரிக்கு நீர் வரத்து 3 மடங்காக உயர்ந்துள்ளதால் 6,000 கனஅடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளது. நேற்று ஏரிக்கு நீர் வரத்து 2,000 கனஅடியாக இருந்த நிலையில் தற்போது 6,000 கனஅடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளது. தானியங்கி ஷட்டர்கள் மூலம் கிளி ஆற்றில் 6,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.