நீலகிரி: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கைதான தனபால் மற்றும் ரமேஷ் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தனபால் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் ஜாமீன் கோரி உதகை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் ஜாமீன் கோரும் மனுக்கள் மீது இருதரப்பு விவாதம் முடிவுற்றதை அடுத்து அரைமணி நேரத்தில் நீதிபதி தீர்ப்பு வழங்கவுள்ளார்.