×

கடம்பூர் மலைப்பகுதியில் ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது

சத்தியமங்கலம்: கடம்பூர் மலைப்பகுதியில் 108 ஆம்புலன்ஸில் மலை கிராம பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி குன்றிமலை கிராமத்தைச் சேர்ந்வர் மசனன். இவரது மனைவி லில்லி. நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். நேற்று அதிகாலை லில்லிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடம்பூரில் இருந்து வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அரப்புலிசாமி, மருத்துவ உதவியாளர் விஜய் ஆகியோர் கர்ப்பிணி பெண் லில்லியை ஏற்றிக்கொண்டு கடம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

கடம்பூர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் மலைப்பாதையிலேயே  பெண்ணுக்கு அதிக வலி ஏற்பட்டதால் ஆம்புலன்ஸிலேயே  பிரசவம் பார்க்கப்பட்டதில் லில்லிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இதைத்தொடர்ந்து, குழந்தையுடன் லில்லியை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தாயையும், குழந்தையையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவித்தனர்.  யானைகள் நடமாட்டம் உள்ள  வனப்பகுதியில் பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் விஜய், ஓட்டுநர் அரப்புலிசாமி ஆகியோரை பொதுமக்கள்  பாராட்டினர்.

Tags : Kadampur hills , Kadampur, hill station, ambulance, for girl, boy
× RELATED கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பஸ்சை வழிமறித்த யானையால் பரபரப்பு