தேனி: டிக் டாக் சுகந்தியை மதுரை மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர். ஒத்தக்கடையை சேர்ந்த பெண் ஒருவருடைய புகைப்படங்களை ஆபாசமாக பதிவேற்றம் செய்த புகாரில் சுகந்தி கைது செய்யப்பட்டுள்ளார். ஒத்தக்கடையை சேர்ந்த பெண் அளித்த புகாரின் பேரில் மதுரை சைபர் கிரைம் போலீசார் சுகந்தி மீது வழக்குப்பதிவு செய்தனர். சுகந்தியை தேனியில் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.