சிவகாசி : சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டியில் பள்ளிக்கு செல்லும் சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதால் மாணவ, மாணவிகள் அவதியடைந்து வருகின்றனர். இதனால் அந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கந்தக பூமி என்று அழைக்கப்படும் சிவகாசியில் ஏராளமான கிராமச்சாலைகள் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகின்றனங ஒருசில கிராமங்களில் சாலைகள் அமைக்கப்பட்ட சில மாதங்களிலையே சேதமடைந்து மீண்டும் பழைய நிலையிலையே சாலைகள் உள்ளன.
குறிப்பாக ஆலமரத்துப்பட்டி பள்ளிக்கு செல்லும் சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் பள்ளி மாணவ மாணவிகள் சிரமத்தை சந்திக்கின்றனர்.
டூவீலர்கள் கூட செல்லமுடியாத நிலையில் பழுதடைந்து காணப்படுகின்றன மேலும் இந்த கிராமத்தில் சுகாதார வசதி, போதிய கட்டிட வசதிகள் இன்றி கிராம மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். அந்த பகுதியில் உள்ள நூலகத்தை ரேஷன் கடையாக மாற்றி செயல்படுவதும் மாணவ,மாணவியர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவ மாணவிகளின் நலன் கருதி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.