×

புனித் சமாதியில் சூர்யா கண்ணீர் அஞ்சலி

சென்னை: கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த அக்டோபர் 29ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரின் உடல் அரசு மரியாதையுடன் பெங்களூருவில் இருக்கும் கண்டீரவா ஸ்டுடியோஸில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் புனித்தின் சமாதிக்கு நேற்று சென்று அஞ்சலி செலுத்தினார் நடிகர் சூர்யா. சமாதியில் துக்கம் தாங்காமல் அவர் அழுதார். கண்ணீர் அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த சூர்யா கூறியதாவது: எந்த போட்டோ, வீடியோவில் பார்த்தாலும் சிரித்துக் கொண்டே தான் புனித் இருப்பார். அவர் செய்த நல்ல காரியங்கள் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ராஜ்குமார் குடும்பமும் எங்கள் குடும்பமும் நெருக்கமானவர்கள். கர்நாடக மக்கள் புனித் மீது அதீத அன்பு வைத்துள்ளனர். அதன் மூலம் அவர் வாழ்ந்துகொண்டே இருப்பார் என்றார். முன்னதாக புனித்தின் வீட்டிற்கும் சென்றார் சூர்யா. சமாதிக்கு சூர்யாவுடன் புனித்தின் அண்ணன் சிவராஜ்குமாரும் வந்திருந்தார். இதேபோல் புனித்தின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார் நடிகர் விஜய் சேதுபதி.

Tags : Surya , Surya tears tribute at the holy tomb
× RELATED சூரிய பகவானின் தேரைக் கொண்ட சூரிய கோயில்