மதுரை: கொள்ளிடம் மேம்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்க கோருவது பற்றி பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி, தஞ்சை ஆட்சியர்கள், நெடுஞ்சாலைத்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கல்லணை, கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் நகர பேருந்தையும் அனுமதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது.