கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த தேவர்சோலை அருகே உள்ளது பாடந்துறை. இங்கு முகாமிட்டுள்ள 2 காட்டுயானைகள் தொடர்ந்து 2 வீடுகளை இடித்து உள்ளே சென்று அரிசி, பருப்புகளை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தியது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இதே பகுதியில் உள்ள 3வது மைல் மஞ்சள் மூலைக்கு 3 காட்டுயானைகள் புகுந்தன. பின்னர் அங்கிருந்த தொழிலாளி கிறிஸ்டோபர் என்பவரது வீட்டை இடித்து தள்ளியது.