×

கூடலூர் வனக்கோட்டத்தில் ஒரு வயது மதிக்கத்தக்க யானை குட்டி மீட்பு

கூடலூர்: கூடலூர் வன கோட்டம், பந்தலூர் சரகத்தில் உள்ள தங்கசுரங்கம் பகுதியில் ஒரு வயது மதிக்கத்தக்க பெண் யானை குட்டி தாயை பிரிந்த நிலையில் சுற்றிச் இருந்ததைப் பார்த்து பந்தலூர் மற்றும் நாடுகாணி வனத்துறை ஊழியர்கள் அதனை பத்திரமாக மீட்டனர். முதுமலை கால்நடை மருத்துவர் அறிவுரையின் பேரில் அந்த யானை குட்டிக்கு லாக்டோஜன் பால் மற்றும் குளூக்கோஸ் ஆகியவை கொடுக்கப்பட்டது. பின்னர் நேற்று மாலை அருகில் உள்ள வனப்பகுதியில் யானை கூட்டம் இருப்பது கண்டறியப்பட்டு அந்த யானை குட்டியை கால்நடையாகவே அழைத்துச் சென்று யானை கூட்டம் இருக்கும் இடத்தில் விடப்பட்டது. பின்னர் குட்டியின் குரலை கேட்டதும் காட்டு யானைகள் குட்டியை பத்திரமாக காட்டுக்குள் அழைத்துச் சென்றது.

Tags : Forest of Güdalur , Elephant
× RELATED பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் பள்ளி 100% தேர்ச்சி பெற்று சாதனை