×

களைகட்டும் தீபாவளி!: வேப்பூர் வாரச்சந்தையில் 4 மணி நேரத்தில் ரூ. 4 கோடிக்கு ஆடுகள் விற்பனை..வியாபாரிகள் உற்சாகம்..!!

கடலூர்: தீபாவளியை முன்னிட்டு கடலூர் அருகே வேப்பூர் வாரச்சந்தையில் இன்று 4 மணி நேரத்தில் 4 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். திட்டக்குடி அடுத்துள்ள வேப்பூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். தீபாவளி நெருங்கி வரும் நிலையில் இன்று நடைபெற்ற சந்தையில் வேப்பூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்ததால் ஆட்டுச்சந்தை களைகட்டியது.

இந்த நிலையில் அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணி வரையில் 4 மணி நேரத்தில் சுமார் 4 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். வாரச்சந்தைக்கு ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருபவர்களிடம் இதுநாள் வரை வேப்பூர் ஊராட்சி சார்பில் ஒரு ஆட்டிற்கு 30 ரூபாயை வசூல் செய்துள்ளனர். ஆனால் இன்று சந்தையில் ஒரு ஆட்டிற்கு தலா 60 ரூபாய் என வசூல் செய்ததாகவும், ரசீதில் ஆடுகளின் எண்ணிக்கையை மட்டும் குறிப்பிட்டு தொகையை எழுதாமல் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.


Tags : Diwali ,Vapur Weekend Goats , Veppur Weekly Market, Rs. 4 crore, sale of goats
× RELATED தீபாவளி சீட்டு நடத்தி ரூ.20கோடி மோசடி: 3பேர் கைது