×

16வது ஜி20 நாடுகள் மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றார் பிரதமர் நரேந்திர மோடி

ரோம்: 16வது ஜி20 நாடுகள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இத்தாலி சென்றார். ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு ரோம் நகரில் நாளையும் நாளை மறுநாளும் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு இத்தாலி பிரதமர் மரியோ டிரகி அழைப்பு விடுத்திருந்தார். ஜி 20 கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்கின்றனர். இம்மாநாட்டில் கொரோனா கால பாதிப்புகள், கொரோனா லாக்டவுன்களால் பாதிக்கப்பட்ட சர்வதேச நாடுகளின் பொருளாதார மீட்சி, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

Tags : Narendra Modi ,Italy ,16th G20 Nations Conference , modi, G20
× RELATED முதலமைச்சர், பிரதமராக இருந்தும் என்...