×

வலைபயிற்சியில் பந்துவீசிய ஹர்திக் பாண்டியா

துபாய்: உலக கோப்பை டி.20 தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. அந்த போட்டியில் இந்திய பவுலர்களால் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியவில்லை. இதனால் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்திய அணி தனது 2வது போட்டியில் வரும் ஞாயிற்றுக்கிழமை துபாயில் நியூசிலாந்துடன் மோதுகிறது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு நீடிக்கும். முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்த நியூசிலாந்துக்கும் இதே நிலை தான்.

இதனால் இந்திய அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். முதல் போட்டியில் பேட்டிங்கின் போது வலது தோள் பட்டையில் காயம் அடைந்த ஹர்திக் பாண்டியா பீல்டிங் செய்யவில்லை. ஸ்கேன் செய்து பார்த்ததில் காயத்தின் தன்மை பெரிய அளவில் இல்லை என்பது தெரியவந்தது.

இந்நிலையில் நேற்று வலை பயிற்சியின் போது அவர் பந்துவீசினார். பல மாதங்களுக்கு பின்னர் அவர் பந்துவீச தொடங்கி உள்ளார். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அவர் ஓரிரு ஓவர் பந்துவீசுவார் என நம்பப்படுகிறது. அனைத்து அணிகளிலும் 6வதாக பகுதி நேர பந்துவீச்சாளர் உள்ள நிலையில் இந்திய அணியில் மட்டும் அந்த வாய்ப்பு இல்லாமல் இருந்தது. தற்போது பாண்டியா பந்துவீசத் தொடங்கி உள்ளது இந்திய அணிக்கு கூடுதல் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கலாம்.

Tags : Hardik Pandya , Hardik Pandya
× RELATED டி20 உலக கோப்பையில் பங்குபெற ஐபிஎல்...