×

சாலை பள்ளத்தில் மீன்பிடி திருவிழா

பெரம்பூர்: சென்னை திருவிக நகர் தொகுதிக்கு உட்பட்ட 70வது வார்டு முத்துக்குமாரசாமி தெரு பகுதியில் சாலையில் பல இடங்களில் குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ளது. இதனை சரி செய்ய அப்பகுதி மக்கள் பலமுறை சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தியும் அவர்கள் சாலையை சரி செய்து தரவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் கவனத்தை ஈர்க்க அப்பகுதி மக்கள் நேற்று சுமார் 30க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி சாலையில் தேங்கி நின்ற மழைநீரில் உயிரோடு உள்ள மீன்களை விட்டு அதை தூண்டில் மூலம் மீண்டும் பிடித்து தங்கள் எதிர்ப்பை காண்பித்தனர். மேலும், தங்கள் பகுதியில் சாலையை சீரமைத்து 6 ஆண்டுகள் ஆகிறது. இனியாவது சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தங்கள் தெருவில் சாலைகளை செப்பனிட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags : abyss , Fishing Festival
× RELATED கொடைக்கானல் - வத்தலக்குண்டு சாலையில் 50...