சென்னை: புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். நீர் இருப்பு, அணையின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்து வருகிறார். புழல் ஏரியில் 18.18 அடிக்கு நீா் உள்ளது. புழல் ஏரியில் நீர் இருப்பு 2,772 மி.கன அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் 2,789 மி.கன அடி நீர் உள்ளது.