×

திருவண்ணாமலையில் 20வது மாதமாக கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை

திருவண்ணாமலை: ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். இந்நிலையில் ெகாரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 19 மாதங்களாக பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் வரும் 19ம் தேதி(நாளை) காலை 6 மணி முதல் வரும் 21ம் தேதி இரவு 12 மணிவரை கிரிவலம் செல்ல உகந்த நேரமாக உள்ளது. ஆனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, தொடர்ந்து 20வது மாதமாக கிரிவலம் செல்ல தடை விதித்து கலெக்டர் பா.முருகேஷ் ேநற்று உத்தரவிட்டார்.

Tags : Kiriwalam ,Thiruvannamalai , Thiruvannamalai, Kirivalam, Devotees, Prohibition
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...