புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. காமராஜ் நகர், சோதனைச்சாவடி, பெரியார் நகர் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. கடந்த 45 நிமிடங்களாக கனமழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.