சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச் சலனம் காரணமாக 6 மாவட்டங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.