×

யாரையும் காரை ஏற்றி நசுக்க நாம் அரசியலுக்கு வரவில்லை : உத்தரப் பிரதேச பாஜக தலைவர் பேச்சால் சலசலப்பு

லக்னோ : லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலையில் குற்றம் சாட்டப்படும் ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை உத்தரப் பிரதேச பாஜக தலைவர் மறைமுகமாக சாடி இருப்பது அந்த கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஒன்றிய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை பாஜக பாதுகாக்க முயற்சிப்பதாக ப்ரியங்கா காந்தி சாடி இருந்தார். இந்த நிலையில் லக்னோவில் நடைபெற்ற பாஜக சிறுபான்மையினர் பிரிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உத்தரப் பிரதேச பாஜக தலைவர் சுதந்திர தேவ் சிங், தங்கள் நடத்தையின் மூலம் தொண்டர்கள் மக்களிடம் நம்பிக்கை பெற வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.

நம்மை பார்த்தால் மக்கள் முகத்தை திருப்பிக் கொண்டு போகும்படி நடந்துக் கொள்ள கூடாது என்ற அவர், நடத்தையை பார்த்ததால் மக்கள் வாக்களிப்பார்கள் என்று கூறினார். மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கவோ அல்லது யாரையும் காரை ஏற்றி நசுக்கவோ நாம் அரசியலுக்கு வரவில்லை என்று லக்கிம்பூர் சம்பவத்தை மறைமுகமாக சுட்டிக் காட்டி பேசினார்.உத்தரப் பிரதேச பாஜக தலைவர் சுதந்திர தேவ் சிங் இந்த பேச்சு அம்மாநிலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags : Uttar Pradesh ,BJP , உத்தரப் பிரதேம் , பாஜக ,தலைவர்,சுதந்திர தேவ் சிங்
× RELATED உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்...