டெல்லி: 9 மாவட்டங்களில் முதற்கட்ட ஊராட்சி தேர்தலில் 77.43% வாக்குகள் பதிவானது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் தேர்தல் முடிந்த நிலையில் அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவு நிலவரம் வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 84.30%, செங்கல்பட்டில் 66.71%, வேலூரில் 77.63%, ராணிப்பேட்டையில் 80.89%, விழுப்புரத்தில் 83.66%, கள்ளக்குறிச்சியில் 82.25%, நெல்லையில் 70.81%, திருப்பத்தூரில் 78.88%, தென்காசியில் 73.96% வாக்குகள் பதிவாகியுள்ளது.