×

கொள்ளை முயற்சியா..முன் விரோதமா?: பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த தாய், 4 வயது குழந்தையை இரக்கமின்றி வெட்டிக்கொன்ற கொடூரர்கள்..!!

பெங்களூரு: பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 35 வயதான பெண், அவரது 4 வயது குழந்தை கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். கொலையாளியை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பெங்களூரு பேவூரை சேர்ந்தவர் சன்னவீரசாமி. அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 3வது மாடியில் மனைவி சந்திரலேகா மற்றும் 4 வயது மகள் ரதன்யா உடன் வசித்து வந்தார். நேற்று வேலை நிமித்தமாக அவர் வெளியே சென்றிருந்த நிலையில், மாலையில் சந்திரலேகா சகோதரி சித்ரா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் சந்திரலேகா மற்றும் அவரது 4 வயது குழந்தை ரதன்யா கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக சன்னவீரசாமிக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நகைகளை திருட வந்த போது கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் முன் விரோதத்தில் இந்த கொலை நடந்ததா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் இருந்த அனைத்து தடயங்களையும் சேகரித்து வருவதாகவும், குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் பெங்களூரு கூடுதல் எஸ்.பி.முருகன் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.


Tags : Bengaluru , Bangalore, mother, 4-year-old child, murdered
× RELATED “வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்துவிட்டேன்; நீங்களும்…”: பிரகாஷ் ராஜ்