சென்னை: தேனி அருகே பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என தகவல் வெளியாகியுள்ளது. நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த ஒருபோதும் அனுமதி தர மாட்டோம் என்று தமிழக அரசின் நிலைப்பாட்டை பியூஷ் கோயலிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.