சென்னை; செம்பரம்பாக்கம் ஏரிக்கு ஒரே நாளில் 50 மில்லியன் கன அடி நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்ப்பரப்பு பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்ததால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. காலை நிலவரப்படி மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் 2895 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.15 அடியாக உயர்ந்துள்ளது.