மும்பை: போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யன்கானை மேலும் 9 நாள் காவலில் எடுக்க என்.சி.பி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. ஆர்யன்கானிடம் இருந்து எந்தவித போதைப்பொருளும் கைப்பற்றப்படவில்லை; ஆர்யன்கானை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என ஆர்யன்கான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.