×

புனேவில் இருந்து 5.4 லட்சம் கோவிஷீல்டு சென்னை வந்தடைந்தது

மீனம்பாக்கம்: ஒன்றிய சுகாதாரத்துறை சார்பில், தமிழகத்திற்கு மேலும் 5.4  லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டது. இந்த தடுப்பூசிகள், மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஒன்றிய மருத்துவ கிடங்கில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டது. அந்த 5.4 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் அடங்கிய 45 பார்சல்கள்  இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் நேற்று மாலை 5.45 மணிக்கு புனேவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தது. இதனை, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் பெற்று, தேனாம்பேட்டை டிஎம்எஸ் அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர். இவை தேவைக்கு ஏற்ப அனைத்து மாவட்டங்களுக்கும் பரித்து வழங்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர். 


Tags : Chennai ,Pune , 5.4 lakh cow shields arrived in Chennai from Pune
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...