×

வாணியம்பாடி கொலை வழக்கு முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்

திருவொற்றியூர்: திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி, ஜீவா நகரை சேர்ந்தவர் வசீம் அக்ரம் (42). மனித நேய ஜனநாயக கட்சி முன்னாள் மாநில துணை செயலாளரான இவர், கடந்த மாதம் 10ம் தேதி மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 15க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். சிலர், நீதிமன்றத்திலும் சரணடைந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளியான விழுப்புரம் மாவட்டம், செல்லியம்மன் கோயில் தெருவை சேர்ந்த கதிர் (42) என்பவர், நேற்று முன்தினம் இரவு திருவொற்றியூர் நீதிமன்றத்தில், நீதிபதி இசக்கி மகேஷ் முன்பு சரணடைந்தார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து பொன்னேரி கிளை சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

Tags : Vaniyambadi ,Charan , Murder case, convict, court, surrender
× RELATED வாணியம்பாடியில் பணப்பட்டுவாடா!:...