தேனி: தேனி மாவட்டம் போடி அருகே சாரல்நகரில் ஜக்கையன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். ஜக்கையன் குடும்பத்துடன் வெளியூர் சென்ற நிலையில் மர்ம நபர்கள் ரூ.25 ஆயிரத்தையும் கொள்ளையடித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.