சென்னை: இந்திய குடிமைப்பணி தேர்வில் வெற்றிபெற்ற தமிழக மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னை அண்ணா மேலாண்மை நிலையத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், சமூக நீதியை கடைபிடிக்கும் வகையில் அண்ணா மேலாண்மை நிலையம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழ்நாட்டில் அண்ணா மேலாண்மை நிலையம் அமைந்துள்ளது. அரசு பணி என்பது இளைஞர்களால் அதிகம் விரும்பப்படும் பணியாக உள்ளது என்று குறிப்பிட்டார்.