×

கூடங்குளத்திலேயே 3வது, 4வது அணு உலைகளின் கழிவுகளை சேமித்து வைக்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி

நெல்லை: நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் அணுமின் நிலையத்திலேயே 3வது மற்றும் 4வது அணு உலைகளின் கழிவுகளை சேமித்து வைக்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. கூடங்குளத்தில் 6 அணுஉலைகள் அமைக்க இந்தியா - ரஷ்யா இடையே ஒப்பந்தம் ஏற்பட்டு முதல் 2 அணு உலைகளில் மின்உற்பத்தி நடந்து வருகிறது. மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகளுக்கான கட்டுமான பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் கூடங்குளத்திலேயே 3வது, 4வது அணு உலைகளின் கழிவுகளை சேமித்து வைக்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

முதல் மற்றும் இரண்டாவது அணு உலைகளில் உற்பத்தியாகும் கழிவுகளை எங்கே சேமித்து வைப்பது என்பது தொடர்பாக இன்னும் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் இந்த முடிவுக்கு அணுசக்திக்கு எதிரான போராட்ட குழு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கூடங்குளம் அமைந்துள்ள ராதாபுரம் தொகுதியின் உறுப்பினரும், சபாநாயகருமான அப்பாவு இதை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags : Atomic Regulatory Authority of India , Koodankulam
× RELATED கடல் சீற்றம் காரணமாக தனுஷ்கோடிக்கு...