சென்னை: சென்னை எழும்பூரில் அதிவேகமாக வந்த கார் அடுத்தடுத்து 5 வாகனங்களில் மோதி விபத்து ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. நேற்று இரவு சென்னை எழும்பூர் காசா மேஜர் சாலையில் கார் ஒன்று அதிவேகமாக வந்துள்ளது. இந்த கார் காசா மேஜர் சாலையில் வந்த 4 வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியுள்ளது. அதில் டாடா நானோ காரின் மீது மோதக்கூடிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
அதன்பிறகு ஒரு ஆட்டோ மீதும், பின்னர் 2 இருசக்கர வாகனங்கள் மீதும் அடுத்தடுத்து மோதியுள்ளது. இதில் இந்த வாகனங்களில் வந்தவர்கள் காயம் அடைந்துள்ளனர். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவர்கள் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அண்ணா சாலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து இதுதொடர்பாக விசாரணை நடத்தினர்.
இதில் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த 57 வயதான ராதாகிருஷ்ணன் என்ற நபர் விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்துள்ளார். அவர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எனவும் கூறப்படுகிறது. அவர் ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டுவிட்டு குடிபோதையில் வந்ததாகவும் கூறுகின்றனர். இதுதொடர்பான பரிசோதனை செய்யப்பட்டு இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்துள்ளனர். இந்த விபத்தை ஏற்படுத்திய அவருடைய பென்ஸ் காரும் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.