ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் அனல்மின் நிலையம் அமைக்கும் பணி குறித்து விவசாயிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. உப்பூரில் அனல்மின் நிலையம் அமைத்து விரிவுபடுத்த நிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நிலங்களை ஒப்படைக்க விவசாயிகள் யாரும் முன்வராத நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.