×

டயர் திடீரென வெடித்ததால் திருப்பூர் எஸ்பி கார் கவிழ்ந்து விபத்து: காயமின்றி உயிர் தப்பினார்

திருப்பூர்: திருப்பூர் எஸ்.பி. சசாங் சாய் சென்ற கார் டயர் வெடித்து சாலையோரம் கவிழ்ந்தது. இதில், எஸ்பி காயமின்றி உயிர் தப்பினார். திருப்பூர் மாவட்ட எஸ்.பி. சசாங் சாய். இவர் சென்னை ஐகோர்ட்டுக்கு ஒரு வழக்கு தொடர்பாக காரில் சென்றார். வழக்கு தொடர்பான வேலைகளை முடித்துவிட்டு நேற்று அதிகாலை 2.30 மணிக்கு காரில் திருப்பூர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரது கார் ஊத்துக்குளி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட செங்கப்பள்ளி அருகே வந்த போது காரின் டயர் திடீரென வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் நிலைதடுமாறிய கார், சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அதிர்ஷ்டவசமாக எஸ்பி காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து  ஊத்துக்குளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Tirupur SP , Tirupur SP car overturns due to sudden burst of tire: Survivor unscathed
× RELATED திருவள்ளூர், திருப்பூர் உள்பட 11 எஸ்பிக்கள் அதிரடி மாற்றம்