சென்னை: போதிய ஆவணம் இன்றி எக்ஸிட் பர்மிட்டுக்கு விண்ணப்பிக்க வந்த இலங்கை நாட்டவர்கள் 4 பேரை வெளிநாட்டவர் பதிவு மண்டல அதிகாரிகள் போலீஸில் ஒப்படைத்தனர். சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்த்திரி பவனில் உள்ள வெளிநாட்டவார் பதிவு மண்டல அதிகாரி புகாரின் பேரில் இலங்கை மட்டக்களப்பைச் சேர்ந்த மகேஸ்வரன் நவநீதன், மனைவி, குழந்தைகளிடம் நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.