×

விவசாயிகள் சங்க கூட்டத்தில் மோதல்

திருச்சி:  விவசாய சங்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. ஒருங்கிணைப்பாளர் குருசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு, துணைத் தலைவர் மேகராஜன், ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் குருசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணி உட்பட பல்வேறு விவசாய அமைப்பினை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அக்டோபர் 2ம் தேதி கன்னியாகுமரி முதல் டெல்லி வரை விவசாயிகள் பயணம் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

அப்போது திடீரென பி.ஆர்.பாண்டியனுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பாக அவர்களிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.  இதில் அதிர்ச்சி அடைந்த சக விவசாய சங்க பிரதிநிதிகள் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அமர வைத்தனர். அதனைத்தொடர்ந்து கூட்டம் நடை பெற்றது.

Tags : Farmers Association , Farmers
× RELATED தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர்...