×

நடனம் ஆடுவதில் இருதரப்பினர் மோதல்: திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் 2 வாலிபர்களுக்கு கத்திக்குத்து

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை, திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இங்கு போடப்பட்ட பாடலுக்கு மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் நடனம் ஆடினர். அப்போது இரு தரப்பினரிடையே திடீரென மோதல் ஏற்பட்டது.  இதில், ஒரு தரப்பினர் மறைத்து வைத்திருந்த கத்தியால் எதிர் தரப்பை குத்தியதில் வண்ணாரப்பேட்டை சஞ்ஜீவிராயன் தெருவை சேர்ந்த கல்லூரி மாணவன்  தினேஷ் (20), கொருக்குப்பேட்டை திருநாவுக்கரசு தோட்டம் 2வது தெருவை சேர்ந்த யுவராஜ் (22) ஆகிய இருவர் படுகாயமடைந்தனர். இதனால், திருமண மண்டபத்தில் பதற்றம் நிலவியது.

தகவலறிந்து வந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார், படுகாயமடைந்த இருவரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, திருவெற்றியூர் கார்கில் நகரை சேர்ந்த ஆகாஷ் (21), தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பை சேர்ந்த ஜான்சன் (26), வினோத் (28), வசந்த் (22), அப்துல் கரீம்  (25) ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Dancing, wedding reception, shouting
× RELATED பெண்களை ஆபாசமாக பேசிய தகராறில் 12 பேரை...