×

ராணுவ ரகசியங்களை தந்த ரயில்வே அதிகாரி கைது

புதுடெல்லி: பாகிஸ்தான் ஐஎஸ்ஐ பெண் உளவாளியின் வலையில் சிக்கி, ராணுவ புகைப்படங்களை அனுப்பிய ரயில்வே தபால் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் மாவட்டம், கெடபா கிராமத்தை சேர்ந்த பாரத் கோதாரா (27). இவர், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே தபால் துறை அதிகாரியாக பணியில் சேர்ந்தார். ஜெய்ப்பூர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த அவருக்கு கடந்த 4 மாதத்திற்கு முன் பேஸ்புக் மூலம் பெண் ஒருவர் அறிமுகமாகி உள்ளார். போர்ட் பிளேரில் எம்பிபிஎஸ் படிப்பதாக கூறி அறிமுகமான அந்த பெண் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயை சேர்ந்தவர் என்பது பாரத்துக்கு தெரியவில்லை.

பேஸ்புக், டிவிட்டர் மூலம் இருவரும் பல மணி நேரம் பேசி உள்ளனர். வீடியோ காலில் பேசி தனது அழகால் பாரத்தை உளவுப்பெண் மயக்கி உள்ளார். அவரது வலையில் வீழ்ந்த பாரத், அந்த பெண் கேட்டபடி ஜெய்ப்பூரில் உள்ள ராணுவ பிரிவின் புகைப்படங்கள், ராணுவ தகவல் தொடர்பு ஆவணங்கள் ஆகியவற்றை அனுப்பி உள்ளார். இருவரும் நேரிலும் சந்தித்து பேசி உள்ளனர். இதை கண்டறிந்த ஜெய்ப்பூரின் ராணுவ உளவுத்துறை, தெற்கு மற்றும் மாநில உளவுத்துறையின் கூட்டுக் குழுவினர் பாரத் கோதாராவை கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.

Tags : Railway officer, arrested
× RELATED பண்டல், பண்டலாக கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது