×

சபரிமலை நடை 16ம் தேதி திறப்பு

திருவனந்தபுரம்: புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 16ம் தேதி  திறக்கப்படுகிறது. மறுநாள் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை கோயில் நடை  திறந்திருக்கும். இந்த 5 நாட்களிலும் தினமும் 15 ஆயிரம் பக்தர்களை  தரிசனத்திற்கு அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இரண்டு டோஸ்  தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். தரிசனத்திற்கான ஆன்லைன்  முன்பதிவு நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கியது.


Tags : Sabarimaya , Sabarimala, walk opening, temple administration
× RELATED மலையாள மாதத்தின் கன்னி மாத பூஜைக்காக...